நாசமாய் போயிருக்கும்..!

நாசமாய் போயிருக்கும்
************************
உன்னைப்
போல் யாரும்.
இந்த உலகில் 
இருந்தால்..!

என்னைப் 
போல் ஒரு 
இளைஞனின்.
வாழ்க்கை 
என்னவாகியிருக்கும்..?

நம்மைப் 
போலவே.
நாட்களை கடந்து
நாசமாய் போயிருக்கும்..!!

உனக்காக 
நான் எழுதிய..
பேனா மை 
தீர்ந்து விட்டது..

உன்னைப் 
போன்றே..
என் காகிதங்கள்.
ஊமையாகி விட்டது..

உன்னுடைய 
நினைவுகள் மட்டும்.
என்னுடைய 
மனதில் ஆழமாய் 
பதிந்து விட்டது..

உனக்காக 
என் விழிகள்.
இரவாகியும் 
உறங்காமல்..
விழித்திருக்கிறது..

உன்னையே
தினம் தினம்.
இணைத்து-நான் 
காவியமாகி விட்டேன்.

உன்னையே 
தினம் தினம்.
நினைத்து-நான் 
ஓவியமாகி விட்டேன்.

கவிஞர்
சேனையூர் சப்றீன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -