ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு தகுதியானவர் தெரிவு - கபீர் ஹாசீம்

அரச, தனியார் ஒன்றிணைந்த வர்த்தகமாக ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு தகுதியான முதலீட்டாளர் ஒருவர் தற்போது தெரிவு செய்யப்பட்டு, அது பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக, அரச தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.

விலைமனுக்களை முன்வைத்த நிறுவனங்களில் இறுதியாக தெரிவு செய்யப்பட்ட மூன்று நிறுவனங்களில் ஒன்றே அடையாளங் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்காக 10 நிறுவனங்கள் விலைமனுக்களை முன்வைத்திருந்ததுடன், அவற்றில் மூன்று நிறுவனங்கள் இறுதிக் கட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருந்தன. இலங்கையுடன் தொடர்புபட்ட பீஸ் எயார் நிறுவனம், மாலைத்தீவுடன் தொடர்புபட்ட சுப்பர் குரூப் நிறுவனம், அமெரிக்காவின் டி.பி.ஜி. நிறுவனம் ஆகியன இறுதியாக தெரிவு செய்யப்பட்ட மூன்று நிறுவனங்களாகும். எனினும் இந்த செயற்பாட்டின் உண்மைத்தன்மை தொடர்பில் பிரச்சினைகள் காணப்படுவதாக தொழிற்சங்கங்கள் குற்றஞ்சாட்டுகின்றன.

இதேவேளை, ஶ்ரீலங்கன் நிறுவனத்தின் கொடுக்கல் வாங்கலுக்கு விலைமனுவை முன்வைத்த பீஸ் எயார் நிறுவனம் நேற்று பிற்பகல் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -