பி.எம்.எம்.ஏ.காதர்-
கந்தளாய் பிரதேச மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் உபகரணங்கள் வழங்கிய நிகழ்வு. சனிக்கிழமை (11.02.2017) கந்தளாயில் திருகோணமலை மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்றூப் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கௌரவ கைத்தொழில் வர்த்தக துறை அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவருமான றிஷாட் பதியுத்தீன், கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் துவிச்சக்கர வண்டி மற்றும் மீன் பெட்டிகளும் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளர் டாக்டர் கில்மி , றஷ்ஷாக் ஹாஜி மற்றும் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.