கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹஸன் அலி உரிய நேரத்துக்கே உயர்பீடத்துக்கு சமூகமளித்திருந்தார்.
ஆனால் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ள சீடிக்களை வெளியாக்கவிருக்கும் கட்சியின் தவிசாளர் பஷீர் சேகு தாவூத் உயர்பீடத்துக்கு சமூகமளிக்க வில்லை.
ஆனால் உயர்பீட உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைய தலைமைக்கும் கட்சிக்கும் அவதூறினைப் பரப்பிக்கொண்டிருக்கும் தவிசாளரை உடனடியாக கட்சியில் இருந்தும் தவிசாளர் பதவியில் இருந்தும் நீக்கவேண்டும் என்று உயர்பீட உறுப்பினர்கள் ஒருமித்து கோரிக்கை விட்டதன் பயனாக இன்றிலிருந்து ஸ்ரீலங்க முஸ்லீம் காங்கிரஸ் தவிசாளர் பதவியில் இருந்து பஷீர் சேகு தாவூத் உடனடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
அடுத்த உயர்பீடக்கூட்டம் எதிர்வரும் 11.02.2017 மாலை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அடுத்த உயர்பீடக்கூட்டம் எதிர்வரும் 11.02.2017 மாலை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.