அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா நேற்று சட்டசபை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தன்னுடைய பதவியை ராஜினாமா செய்து விட்டார். அவரது ராஜினாமாவை இன்று ஆளுநர் ஏற்றுக் கொண்டார்.
இந்நிலையில் சசிகலா நாளை காலை 11 மணிக்கு முதல்வராக பதவி ஏற்பார் என தகவல் வெளியாகியுள்ளது. இது இன்னும் அரசு தரப்பில் உறுதிப்படுத்தப்படவில்லை. மேலும் சசிகலா பதவியேற்க ஏதுவாக சென்னை பல்கலைக்கழகக் நூற்றாண்டுவிழா கலையரங்கம் தயாராகி வருகிறது. இன்று காலை முதலே கலையரங்கம் சுத்தம் செய்யப்பட்டு பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்டு வருகிறது.