க.கிஷாந்தன்-
இலங்கையின் 69வது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் முகமாக நுவரெலியா பிரதேச சபையின் ஏற்பாட்டில் கொட்டகலை நகரில் சிரமதான பணி ஒன்று மேற்கொள்ளப்பட்டது. கொட்டகலை ஸ்ரீ முத்து விநாயகர் கோயில் மண்டபத்திற்கு அருகாமையில் இந்த சிரமதான பணி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதில் திம்புள்ள பத்தனை பொலிஸ் நிலையம், கொட்டகலை வர்த்தக சங்கம், சர்வோதயம், ரொசிட்டா நலன்புரி சங்கம், கிராம உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துக்கொண்டனர். இதன் போது கொமர்ஷல், பாத்தியபுர, கங்கைபுரம், ரயில்வே வீதி, கொட்டகலை நகரம், விஷ்னுபுரம் போன்ற இடங்களில் இந்த சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.