ஐ. ஏ. காதிர் கான் -
மினுவாங்கொடை - கல்லொழுவை, தாருல் அர்கம் நிறுவனத்தின் குர் ஆன் கல்விப் பிரிவு, "ஹுமைரா மகளிர் அரபிக் கல்லூரி" என்ற பெயரில் புதிய அரபிக் கல்லூரி ஒன்றை, (12) ஞரயிற்றுக் கிழமை காலை 9.00 மணிக்கு அங்குரார்ப்பணம் செய்து வைக்கவுள்ளது.
கல்லொழுவை ஜும் ஆப் பள்ளிவாசல் நிர்வாக சபைத் தலைவர் அல் ஹாஜ் ஏ. எச். எம். முனாஸ் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளும் இந் நிகழ்வில், கொழும்பு - மர்கஸ் ஸபீலுர் ரஷாத் அரபிக் கல்லூரியின் விரிவுரையாளர் அஷ் ஷேஹ், அல் ஹாபிழ் அப்துல் ஹாலிக் (தேவ்பந்தி) விசேட மார்க்கச் சொற்பொழிவாற்றவுள்ளார்.
நாளை (13) திங்கட்கிழமை தொடக்கம் ( பாடசாலை நாட்களில் ) காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை, பகுதி நேரமாக இயங்கவுள்ள இக் கல்லூரியில் முதற் தடவையாக 42 மாணவிகள் இணைக்கப்பட்டுள்ளனர்.
முதற் தடவையாக க.பொ.த. (சா/த) பரீட்சை எழுதிய மாணவிகள், இக் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.