யு ஆ கீத் திருகோணமலை-
திருகோணமலையில் இருந்து ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு போன திருகோணமலை மீனவர்களால் இரண்டு மியன்மார் மீனவர்கள் கடந்த மாதம் 25ம் திகதி ஆழ்கடலில் தமது பாய்மரத்தோனி காற்றினால் இழத்துவரப்பட்ட நிலையில் மீட்கப்பட்டடனர்.
மீட்கப்பட்டவர்களில் ஒருவரை திருகோணமலை கொட்பே துறைமுகத்திற்கு அழைத்துவந்து திருகோணமலை துறைமுகப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். மற்றொருவரை அழைத்துவரும் முயற்சியில் மீனவர்கள் உள்ளனர்.
மேலும் அழைத்து வரப்பட்டவர் தமது பெயர் மாஒசேன் என்றும் தமக்கு இரு பிள்ளைகள் இருப்பதாகவும் தான் புத்தமதத்தை பின்பற்றுவதாகவும் கூறினார்.
மேலும் அழைத்து வரப்பட்டவர் தமது பெயர் மாஒசேன் என்றும் தமக்கு இரு பிள்ளைகள் இருப்பதாகவும் தான் புத்தமதத்தை பின்பற்றுவதாகவும் கூறினார்.