ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பதவியிலிருந்தும் இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ள பஷீர் சேகுதாவூத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பான ஒழுக்காற்று விசாரணைக்கான திகதி எதிர்வரும் அரசியல் உயர்பீட கூட்டத்திலேயே தீர்மானிக்கப்படும் என முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் மன்சூர் ஏ. காதர் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளர் பசீர் சேகுதாவூத் தொடர்பான ஒழுக்காற்று விசாரணை பற்றி வினவியபோதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;
‘தவிசாளர் பதவியிலிருந்தும் இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை தொடர்பான கடிதம் அவருக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டு விட்டது. அடுத்த உயர்பீட கூட்டத்தில் ஒழுக்காற்று விசாரணைக்கான திகதி தீர்மானிக்கப்பட்டு அவருக்கு அறிவிக்கப்படுவதுடன் விசாரணையை நடத்தி அறிக்கை சமர்ப்பிப்பதற்கு குழுவொன்றும் நியமிக்கப்படும் என்றார்.