கவிஞர் த.ரூபன் எழுதிய "ஜன்னல் ஓரத்து நிலா " கவிதை நூல் வெளியீட்டு விழா..!

திருமலை மாவட்டத்தின் கவிஞர் த.ரூபன் எழுதிய "ஜன்னல் ஓரத்து நிலா " கவிதை நூல் வெளியீட்டு விழாவும் சமூக சேவையாளர்கள் கௌரவிப்பும் 100 வறிய மாணவர்களுக்கு வங்கி கணக்கு திறந்து வைத்ததுடன் அப்பியாசக் கொப்பிகளும் வழங்கி வைக்கும் நிகழ்வு கடந்த 29.01.2017 ஞாயிற்றுக்கிழமை  ஈச்சிலம்பற்று ஸ்ரீ சன்பகா மகாவித்தியத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வினை நந்தவனம் பவுண்டேசன் (இந்தியா) அம்பாரை மாவட்ட தமிழ் எழுத்தாளர் மேம்பாட்டு பேரவை, கல்விக்கு கரம் கொடுப்போம் அமைப்பு, மற்றும் வவுனியா ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றம் என்பன இணைந்து நடாத்தியது. இதில் பாராளுமன்ற உறுப்பினர் திரு சீ.யோகேஸ்வரன் மற்றும் இந்திய இலங்கை கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வுகள் யாவும் இம்போட்மிரர் ஊடக வலையமைப்பின் சிகரம் சர்வதேச இணைய வானொலியில் நேரடியாக அஞ்சல் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் நிகழ்வுகள் பகல் போஷணத்துடன் இனிதே நிறைவுற்றது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -