கொலை செய்ய திட்டம் - சுமந்திரனுக்கு அதிரடி பாதுகாப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனுக்கு கடுமையான பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர கிளைமோர் தாக்குதல் மூலம் படுகொலை செய்ய திட்டமிடப்பட்டு இருந்ததாக கூறி, சந்தேகத்தில் ஐவர் கைது செய்யப்பட்டும் உள்ளனர். இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினருக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வட்டுக்கோட்டை இந்துக்கல்லூரி மைதானத்தில் இளைஞர் ஒருவர் அடித்துக்கொல்லப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணை யாழ்.மேல் நீதிமன்றில் இன்றைய தினம் நடைபெற்றது. அதன் போது எதிரிகள் சார்பில் மன்றில் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் முன்னிலையானர். இதனையடுத்து யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியை சூழவுள்ள பகுதியில் பலத்த காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டதுடன் விசேட அதிரடிப்படை பாதுகாப்பும் வழங்கப்பட்டு இருந்தது. அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினரின் வாகன தொடரனிக்கும் விசேட காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
gtn
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -