விபத்து : ஒருவர் உயிரிழப்பு - ஐவர் படுங்காயம்

க.கிஷாந்தன்-
நாவலப்பிட்டி பார்கேபல் பகுதியிலிருந்து அட்டன் டிக்கோயா பகுதியை நோக்கி ஆலய திருவிழா ஒன்றுக்கு சென்ற முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணித்தவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்து 10.02.2017 அன்று அதிகாலை 1 மணியளவில் டிக்கோயா தொழிற்சாலைக்கு அருகில் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் உயிரிழந்தவர் நாவலப்பிட்டி பார்கேபல் பகுதியை சேர்ந்த ராஜரட்ணம் 55 வயது மதிக்கதக்கவர் என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

நாவலப்பிட்டி பார்கேபல் பகுதியிலிருந்து டிக்கோயா பகுதியில் இடம்பெறவிருந்த திருவிழாவை கண்டுகளிக்க வந்து டிக்கோயா வனராஜா பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு செல்லும் வேளையில் டிக்கோயா தொழிற்சாலை கொங்கிறீட் பாதையில் இவர்கள் பயணித்த முச்சக்கரவண்டி பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த முச்சக்கரவண்டியில் சாரதி உட்பட 6 பேர் பயணித்துள்ளதாகவும், இதில் 4 ஆண்கள் ஒரு சிறுவன், ஒரு பெண் ஒருவரும் உள்ளடங்குவதாகவும் தெரியவந்துள்ளது.

படுங்காயம்பட்டவர்கள் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் உயிரிழந்தவரின் சடலம் குறித்த வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -