நீயே என் முகவரி....
*****************
தொலைந்த
உன் முகவரியில்
தொடர்ந்த
என் முகவரி
தொலையாமல்
வெகுமதியாகுமோ..!!
நுழைந்தேன்
உன் பார்வையில்..
தொலைந்தேன்
உன் போர்வையில்..!
அழைந்தேன்
உன் பாதையில்..
வளைந்தேன்
உன் கூந்தலில்..!
விழுந்தேன்
உன் காதலில்..
எழுந்தேன்
உன் மோதலில்..!
கிழிந்தேன்
உன் பிடிவாதலில்..
அழிந்தேன்
உன் முடிவானதில்..!
எனக்கு பொருமை
ஒரு முடிவானது..
எனக்கு அருமை
ஒரு வடிவானது..!
எனக்கு பெருமை
ஒரு நொடியானது..
எனக்கு உரிமை
ஒரு படியானது..!
நான் கடந்த
முகவரிகள்
நகர்ந்து போகும்
இந்த வாழ்க்கையில்..!!
பிறந்தது
ஒரு முகவரி..
முகநூலின்
முகவரியால்..
என் முகவரியின்
முதல் வரியால்..!!
விழித்திருந்தேன்
இனியும் என்னை
வீழ்த்துவது யாரென்று..
விடுத்திருந்தேன்
பனிவாய் இதனை பாரென்று..
அழித்திருந்தாய்
அழுத ஈரம் காயும் முன்பே..!!
இரு வரியில்
ஒரு வகை நாமத்தோடு..
புது வகையில்
புதுப்பிச்ச பயணத்தோடு..!!
✍கவிஞர்
சேனையூர் சப்றீன் அட்டாளைச்சேனை