பத்து லட்சம் வேலைவாய்ப்புக்கள் - அரசு

எதிர்வரும் காலத்தில் பத்து லட்சம் வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதற்காக ‘சுவசக்தி’ எனும் பெயரில் தேசிய வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இத்திட்டம் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பான அமைச்சின் மூலம் இலங்கை மத்திய வங்கியுடன் இணைந்து செயற்படுத்தப்படவுள்ளது.

சிறிய மற்றும் மத்திய வியாபார துறைகளில் வேலைவாய்ப்புக்களை உருவாக்கும் நோக்கில் புதிய வியாபாரிகள் 25,000 இனை உருவாக்குவதை விருத்தி செய்வதற்காக பிரதேச அபிவிருத்தி வங்கி மற்றும் வணிக வங்கி ஆகியவற்றின் மூலம் கடன் வசதிகளை செய்து கொடுப்பது இவ்வேலைத்திட்டத்தின் எதிர்பார்ப்பாகும்.

இதன் மூலம் சிறந்த வியாபார திட்டங்களின் திறனை கருத்திற் கொண்டு 250,000 ரூபாபாவிற்கு உட்பட்டதாக நிதி வசதிகளை செய்து கொடுப்பதுடன், அத்தொகையினுள் வியாபாரிகளுக்காக 50,000 ரூபா நிதியுதவியுடன், 200,000 ரூபா பெறுமதியான கடன் தொகையும் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இக்கடன் மற்றும் நிதியுதவி ஆகிய யோசனைகளை இலங்கை மத்திய வங்கியின் ஊடாக செயற்படுத்துவது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பான அமைச்சர் எனும் ரீதியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -