சென்னை: சசிகலாவுக்கு எதிராக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அளித்த பேட்டியை வரவேற்று தமிழகம் முழுக்க அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
குறிப்பாக சசிகலா எதிர்ப்பாளர் கே.பி.முனுசாமி, ஓ.பி.எஸ், பி.ஹெச்.பாண்டியனின் ஆதரவாளர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் கொடுத்தும் கொண்டாடிடனர்.
அதிமுக பெண் தொண்டர்கள் பலரும் ஓ.பி.எஸ்சுக்கு ஆதரவாக இருப்பதால் அவர்களும் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதை பல இடங்களில் பார்க்க முடிந்தது.
சிவகாசி அம்பேத்கார் சிலை அருகே பட்டாசு வெடித்து அதிமுகவினர் கொண்டாடியதாக அங்கிருந்து வரும் தகவல் தெரிவிக்கிறது. சென்னையிலும் பல்வேறு இடங்களில் பட்டாசு வெடித்து தொண்டர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -