12.50 மணிக்கு செய்தியாளர் சந்திப்பை முடித்து விட்ட ஓபிஎஸ், முன்னாள் அமைச்சர் செம்மலை, எம்எல்ஏ சின்ராஜ், கரூர் வீகே. சின்னசாமி ஆகியோரை வரவேற்று விட்டு அமைதி காக்க வேண்டும் என பேசினார்.
இதனை தொடர்ந்து சசிகலாவை உட்கார்ந்த இடத்திலிருந்தே ஓடவிட்ட கூவத்தூர் ரிசார்ட்டுக்கு கிளம்பிவிட்டார் ஓபிஎஸ்.
படை பரிவாரம் போலீஸ் புடை சூழ கூவத்தூர் ரிசார்ட்டுக்கு கிளம்பி விட்டார்.
சினிமாவில் கிளைமாக்ஸ் காட்சி போல அடுத்தடுத்த காட்சிகள் அரங்கேறி கொண்டிருக்கின்றன.
ஓபிஎஸ் தற்போது கூவத்தூருக்கு கிளம்பிவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.