எச்.எம்.எம்.பர்ஸான்-
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்துக்குட்பட்ட மட்/மம/ ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் வரலாற்றில் முதல் தடவையாக மாணவத் தலைவர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகப் பரீட்சை நேற்று 11.02.2017ம் திகதி அதிபர் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாக் அவர்களின் தலைமையில் அதிபர் காரியாலயத்தில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.
நூற்றாண்டு விழாவினை மிகவும் சிறப்பான முறையில் கொண்டாட இருக்கும் மேற்படி பாடசாலையில் நேர்முகப் பரீட்சையில் க.பொ.த சாதாரண தரம் மற்றும் க.பொ.த உயர் தர மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
நடைபெற்ற நேர்முகப் பரீட்சையில் அதிபர், பிரதி அதிபர்களான ஏ.எல்.கபீர், ஏ.எம். நஜீப், பகுதித் தலைவர்களான ஏ.எல்.இப்ராகீம் ஏ.சீ.எம்.பிர்னாஸ் மற்றும் ஓழுக்க மேம்பாட்டுக் குழு உறுப்பினர்களான எம்.எம்.அமீர், எம்.எல்.எம்.நஜீம் ஆகிய ஆசிரியர்களோடு சிரேஷ்ட, உப சிரேஷ்ட மாணவத் தலைவர்களும் கலந்துகொண்டனர்.
குறித்த நேர்முகப் பரீட்சையில் தெரிவு செய்யப்படவிருக்கும் மாணவர்களுக்கு விஷேட வெளிக்களப் பயிற்சி வழங்கப்பட்டு கடமைகளுக்கு நியமிக்கப் படவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.