தாம் வாழ்ந்த வீட்டிற்குச் சென்ற ஜனாதிபதி - வியப்பில் மக்கள்

னாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் (05) முற்பகல் தமது சொந்த ஊரான பொலன்னறுவை லக்ஷ உயனவிற்கு விஜயம் செய்ததுடன் அப் பிரதேச மக்களையும் சந்தித்தார்.

தமது சிறு பருவத்தில் தாம் வாழ்ந்த வீட்டிற்கு சென்ற ஜனாதிபதி அவர்கள் வீட்டு முற்றத்தில் சிறிது நேரம் உலாவி சுதந்திரமாக பொழுதைக் கழித்ததுடன் பிரதேசவாசிகளை சந்தித்து உரையாடவும் மறக்கவில்லை.

தமது சுகதுக்கங்களை விசாரிப்பதற்காக வருகைத்தந்த அரச தலைவரை அன்போடு வரவேற்ற மக்கள் அவருடன் சுமுகமான உரையாடலிலும் ஈடுபட்டனர்.

அதன்பின்னர் அங்குள்ள சில்லறைக் கடைக்கு சென்று பொருட்களின் விலைகளைப் பற்றிக் கேட்டறிந்த ஜனாதிபதி அவர்கள் அங்கிருந்த மக்களுடனும் உரையாடினார்.

ஞாயிறு விடுமுறை நாளான இன்று தமது வாழ்வின் நிகழ்வுகள் பலவற்றை நினைவுப்படுத்திய வண்ணம் கிராமத்தில் உலாவிய ஜனாதிபதி அவர்கள் லக்ஷ உயன புகையிரத நிலையத்திற்கும் சென்றார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -