அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் உடல் நல மேம்பாட்டு தேசிய வாரம் அனுஸ்டிப்பு.!

சியாத் எம் இஸ்மாயில்-
லங்கையில் அதிவேகமாக பரவுகின்ற தொற்றா நோயை கட்டுப்படுத்துவது தொடர்பான சிறப்பான ஆரம்பம் ஒன்றை வழங்குவதை நோக்காகக் கொண்டு அதி மேதகு ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேன அவர்களின் ஆலோசனையின் பிரகாரம் விளையாட்டு துறை அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டு நாடுதழுவிய ரீதியில் பெப்ரவரி 06ம் திகதியில் இருந்து 12ம் திகதி வரை  உடல் நல மேம்பாட்டு தேசிய வாரம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில் அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் சுற்றறிக்கைக்கு அமைவான குறித்த நிகழ்வு இன்று (2017.02.06) திங்கள் கிழமை அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ் தலைமையில் பிரதேச செயலக முன்றலில் இடம் பெற்றது.

இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளரினால் தேசிய கொடி ஏற்றப்பட்டதனைத் தொடர்ந்து தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து "சுகதேகிகளான அரசாங்க அலுவலர்களினூடாக வினைத்திறனும்
விளைதிறனும் வாய்ந்த அரசாங்க சேவையை வழங்குவது குறித்து உடற்பயிற்சி மற்றும் போசாக்கு" என்பவற்றின் முக்கியத்துவம் குறித்தும் சிறப்புரையொன்று உதவி பிரதேச செயலாளரினால் நிகழ்த்தப்பட்டது.

அதனை தொடர்ந்து அம்பாரை மாவட்ட மெய்வல்லுனர் பயிற்றுவிப்பாளர் எஸ.எல்.தாஜுதீன் அவர்களின் வழிகாட்டலில் அனைத்து உத்தியோகத்தர் பங்களிப்புடனும் உடற்பயிற்சி இடம்பெற்றது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -