பாறுக் ஷிஹான்-
சாவகச்சேரி - சரசாலை கனகம்புளிச்சந்திக்கு அருகாமையில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன. நேற்றைய முன் தினம்(10) நண்பகல் வேளையில் கிணற்றினை துப்பரவு செய்யும் போதே இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதன் போது கைக்குண்டு 2 மிதிவெடி 2 கிளைமோர் 1 செல் 1 என்பன மீட்கப்பட்டுள்ளது.
குறித்த வீட்டில் ஆரம்ப காலத்தில் இராணுவம் நிலைகொண்டிருந்த நிலையில் தற்போது அக் கிணற்றினை துப்பரவு செய்யும் போதே இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் தற்போது சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.