எடப்பாடி கே.பழனிச்சாமியை தமிழகத்தில் ஆட்சியமைக்க ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைப்பு விடுத்துள்ளார். இதனையடுத்து தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலையே பதவியேற்க உள்ளார். மேலும் ஆட்சியமைத்த 15 நாட்களுக்குள் பேரவையில் வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து பழனிச்சாமி இன்று மாலை 4 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 14- ம் தேதி எடப்பாடி பழனிச்சாமி அளித்த சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தின் அடிப்படையில் அவரை ஆட்சியமைக்க ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைத்துள்ளார்.