எடப்பாடி பழனிச்சாமி இன்று முதல்வராக பதவியேற்கின்றார்



எடப்பாடி கே.பழனிச்சாமியை தமிழகத்தில் ஆட்சியமைக்க ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைப்பு விடுத்துள்ளார். இதனையடுத்து தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலையே பதவியேற்க உள்ளார். மேலும் ஆட்சியமைத்த 15 நாட்களுக்குள் பேரவையில் வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். 

இதனையடுத்து பழனிச்சாமி இன்று மாலை 4 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 14- ம் தேதி எடப்பாடி பழனிச்சாமி அளித்த சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தின் அடிப்படையில் அவரை ஆட்சியமைக்க ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைத்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -