இலுக்குச்சேனை பாடசாலைக்கு ஒலிபெருக்கி சாதனங்கள் கையளிப்பு..!

எம்.ஜே.எம்.சஜீத்-
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபையிரின் 2016ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவு நிதியொதுக்கீட்டிலிருந்து இலுக்குச்சேனை அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலைக்கு ஒலிபெருக்கி சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இவ் ஒலிபெருக்கி சாதனங்களை கையளிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் ஏ.ஹாறுடீன் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபையிர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு தளபாடங்களை பாடசாலை அதிபரிடம் கையளித்தார். இதன்போது இறக்காம பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவரும், பொறியியலாளருமான எஸ்.ஐ மன்சூர், இறக்காமம் கோட்டக்கல்வி அதிகாரி, ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் சுபையிர் கடந்த வருடமும் தனது நிதியொதுக்கீட்டின் மூலம் இப்பாடசாலைக்கு அலுவலக தளபாடங்களை கையளித்தமை குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -