சுலைமான் றாபி-
நிந்தவூர் ஹாஜியார் வீதியைச் சேர்ந்த செய்கு முஹம்மட் சலாஹுத்தீன் செய்கு அஹமட் ஜெஷீம் ஆசாத் மௌலானா கடந்த (27) சட்டத்தரணியாக உயர் நீதிமன்ற பிரதம நீதியரசர் மாண்புமிகு கே.ஸ்ரீபவன் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலைப்பிரிவு மாணவரான இவர், கடந்த 2013ம் ஆண்டு சட்டக் கல்லூரிக்கு தெரிவாகியிருந்ததோடு தனது இள வயதினிலேயே சட்டத்தரணியாகியுள்ளார்.
நிந்தவூர் அஷ்ரக் தேசியப் பாடசாலையின் பழைய மாணவரான இவர் எஸ்.ஏ.எஸ்.எம்.சலாஹுத்தீன் மௌலானா, மற்றும் எம்.ஐ.மைமுனா ஆகியோர்களின் ஒரே ஒரு புதல்வர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.