அஸ்ரப் அவர்கள் சந்திரிக்காவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டவை என்ன..?

ந்திரிக்கா அம்மையார் அவர்கள் அண்மையில் முஸ்லிம்களின் மேல் அனுதாபம் கொண்டவர் போல் பேசியிருக்கின்றார். நமது தலைவர் அஸ்ரப் அவர்கள் 1994ம் ஆண்டு ஆட்சியமைக்க சம்மத கடிதம் கொடுக்கவில்லையென்றால், சந்திரிக்கா அம்மையார் அவர்களின் அரசியல் வாழ்க்கை அத்தோடு முடிந்திருக்கும். அப்படி ஆட்சியமைக்கவும், சந்திரிக்கா பேரோடும் புகளோடும் பிற்பாடு மிளிர்ந்ததற்கு அஸ்ரப்பின் நிபந்தனையற்ற ஒப்புதல் மடலே காரணம் எனலாம்.

சம்மதக்கடிதத்தை பெற்று ஆட்சியமைத்த சந்திரிக்கா அம்மையார் அவர்களை, அடுத்தநாள் அஸ்ரப் அவர்கள் முஸ்லிம்கள் பிரச்சினை பற்றி பேச நேரம் கேட்டபோது, அதனை இப்போது பேசமுடியாது என்றும், மற்ற அமைச்சர்கள் இருக்கும் போது பேசலாம் என்று ஆனவமாக பேசியதாக. அஸ்ரப் அவர்கள் சந்திரிக்காவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமல்ல ஒலுவில் துறைமுக விடயத்தில் அம்மையார் செய்த அநியாயத்தையும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இன்னும் பல மோசடிகளைப்பற்றி அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த கடிதத்தை எழுதிவிட்டு....இனிமேல் உங்களுடன் பயனிப்பதில் பயன் இல்லை என்று மனவேதனையுடன் குறிப்பிட்டுவிட்டு, அதற்காக ரணிலை நான் ஆட்சியமைக்க என் உயிருள்ளவரை அனுமதிக்கமாட்டேன் என்றும் கூறியிருந்தார். ரணிலை நான் ஆட்சியமைக்க அனுமதிப்பதும் ஒன்றுதான், புலிகளை ஆட்சியமைக்க அனுமதிப்பதும் ஒன்றுதான் என்றும் கூறியிருந்தார்.

அந்த காலப்பகுதில் அஸ்ரப் அவர்கள் மர்மமான முறையில் கொல்லப்பட்டார்... அந்த கொலை எப்படி ஏற்பட்டது என்ற விடயத்தை மக்களுக்கு தெளிவுபடுத்த சந்திரிக்கா அம்மையார் எந்த ஏற்பாடுகளையும் செய்வதற்கு ஆர்வம் செலுத்தவில்லை, அதனை தட்டிக்கேட்பதற்கும் முஸ்லிம் மக்களால் முடியவில்லை.

அதன் பிறகு மாவனல்லை குழப்பம் ஏற்பட்டது, அந்த பிரச்சினையை அடுக்குவதற்கு அவருக்கு மூன்று நாட்கள் தேவைபட்டது.. அந்த மூன்று நாட்களுக்குள் மாவனல்லை பொலிசாரும், ராணுவமும் கண்முன்னாலேயே அழிக்கப்பட்டது. அதற்கான நஸ்டஈடுகளும், விசாரணைகளும் இதுவரை நடக்கவில்லை. இந்த அநியாயங்கள் முஸ்லிம்கள் மனதில் பெரிதாக பதியவில்லை, காரணம் அந்த நேரம் புலிகள் முஸ்லிம்களை நரவேட்டை ஆடிய காலம், அதனால் இந்த பிரச்சினை அவர்களுக்கு பெரிதாக படவில்லை.

ஆகவே சந்திரிக்கா அம்மையாரை உலகத்துக்கு இனம்காட்டிய பெருமை அஸ்ரப் அவர்களையே சாரும், அப்படிக்கொந்த அஸ்ரப் அவர்களையே ஏமாற்றிய இந்த அம்மையார் இப்போது முதலைக்கண்ணீர் வடிப்பது ஏற்கமுடியாத விடயமாகும். அஸ்ரப் அவர்களின் 53 பக்க கடிதத்தை வாசித்து பாருங்கள் துரோகிகள் யாரென்று புரியும்.

எம்.எச்.எம்.இப்ராஹிம்,
கல்முனை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -