எஸ்.ஹமீத்-
பெண் கல்விக்காகப் போராடிய பாகிஸ்தான் சிறுமி மலாலா யூஸுஃபுக்கும் குழந்தைகளின் உரிமைக்காகப் போராடி வந்த இந்தியாவைச் சேர்ந்த கைலாஷ் சத்யார்த்திக்கும் 2014 ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதில் கைலாஷ் சத்யார்த்தியின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நோபல் பரிசு மாதிரியும் சான்றிதழும் நேற்றுக் காலை திருட்டுப் போய்விட்டதாக டெல்லி போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. வீட்டில் யாருமில்லாத சமயமாகப் பார்த்துத் திருடர்கள் வீட்டை உடைத்து உள் நுழைந்துள்ளனர்.
திருடர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.