டொனால்ட் ட்ரம்பின் அகதிகள் தொடர்பான உத்தரவை அடுத்து, இலங்கையர்கள் சிலரும் நியுயோர்க் நகரின் ஜோன் எப் கெனடி விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசியன் கொரஸ்பொண்டன்ட் ஊடகம் இதனைத் தெரிவித்துள்ளது. 7 நாடுகளைச் சேர்ந்த அகதிகளுக்கு 90 நாட்களுக்கு தடை விதிக்கும் நிறைவேற்று உத்தரவை டொனால்ட் ட்ரம்ப் விடுத்திருந்தார்.
இதன்படி, 20 நாடுகளைச் சேர்ந்த 71 அகதிகள், குறித்த விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் இலங்கையர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.