மாட்டைத் திருடி இறைச்சிக்காக கொண்டு சென்ற மூவர் கைது..!

அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை- நாமல்வத்தை பகுதியில் மூன்று எருமை மாடுகளை திருடி அம்மாட்டினை வெட்டி விற்பனைக்காக இறைச்சியை டிமோ பட்டா லொறியில் கொண்டு செல்லும் போது மூன்று பேரை இன்று அதிகாலை (15) கைது செய்துள்ளதாக மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மொறவெவ -யாய 02 யைச்சேர்ந்த எச்.கே.தனுஸ்க சுது பேபி (28வயது) எம்.சதுன் குமார (26வயது) மற்றும் ஏ.எம்.சரத் குமார (25 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது;

நாமல்வத்தை பகுதியைச்சேர்ந்த எம்.எச்.அலிபுல்லாஹ் என்பவருடைய மூன்று இலச்சம் பெறுமதியான மூன்று எருமை மாடுகளை திருடி வீதியோரத்தில் மாட்டினை அறுத்துக்கொண்டிருக்கும் போது பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் டிமோ பட்டாவுடன் 450 கிலோ இறைச்சியையும் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் மற்றைய சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -