சிறுமிக்கு இரகசிய திருமணம் - பெற்றோர் கைது

பாடசாலை மாணவி ஒருவரை திருமணம் செய்ய வைத்த பெற்றோர் பிபில பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான முறையில் 15 வயது சிறுமி அவரின் பெற்றோரினால் 20 வயது இளைஞருக்கு இரகசியமாக திருமணம் செய்து வைத்துள்ளனர்.

மொனராகலை மாவட்டத்திலுள்ள பிபில, மெதகம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. மெதக பாடசாலையில் 9ஆம் தரத்தில் கல்வி கற்ற மாணவி ஒருவருக்கே இவ்வாறு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் பிபில பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பகுதிக்கு கிடைத்துள்ள நிலையில் அந்த சிறுமி, இளைஞர் பெற்றோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட அனைவரையும் பிபில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -