புதிய சிக்கலில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்

எல்லை நிர்ணய அறிக்கையை வர்த்தமாணியில் அறிவிப்பது மேலும் பிற்போடப்பட்டுள்ளதால், வெசாக் பண்டிகைக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்த இயலாது என தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எல்லை நிர்ணயம் தொடர்பக காணப்படும் தொழில்நுட்ப குறைப்பாடுகளை நிவர்த்தி செய்வதுநாடாளுமன்றுத்துக்குரிய பொறுப்பாகும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்ததேசப்பிரிய தெரிவித்துள்ளார். அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தேர்தலை விரைவாக நடத்துமாறு, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், தேர்தல்கள் ஆணைக்குழு தலைவரிடம் இதன்போது வலியுறுத்தியுள்ளனர். இந்த நிலையில், சட்டத்தில் காணப்படும் தொழில்நுட்ப குறைப்பாடுகளை 14 முதல் 30நாட்களுக்குகள் நிவர்த்தி செய்யலாம் என இதன்போது தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர்தெரிவித்துள்ளார்.

எல்லை நிர்ணய அறிக்கையை வர்த்தமாணியில் அறிவிக்கும்வரை சட்டத்திலுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய முடியாது என்று தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -