கிழக்கு முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்படும் அமைச்சர்களுக்கு... YLS ஹமீட்

எஸ். அஷ்ரப் கான்-
கிழக்கு முதலமைச்சர் பதவி தனது கட்சிக்கு கிடைத்தால் கிழக்கு மாகாணத்தையே குடிசையின்றி ஆக்குவேன் என்று சில அமைச்சர்கள் தெரிவித்திருப்பதானது உண்மை நிலைமையை அறியாமல் குறிப்பிடும் சிறுபிள்ளைத் தனமான கருத்தாகும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இது விடயமாக அவர் மேலும் அவ்வூடக அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, இந்த அமைச்சர்களிடம் பின்வரும் கேள்விகளை எழுப்பவிரும்புகின்றேன்

மாகாணசபைகள் பெரும்பாலும் மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டில்தான் செயற்படுகின்றன; என்பதை இந்த அமைச்சர்கள் அறிவார்களா? ( சிறிய ஒரு சொந்த வருமானத்தைத் தவிர) அது ஏன் அல்லது மாகாணசபைகள் சொந்த நிதியைப் பெற்றுக்கொள்வதில் உள்ள தடைகளை அவர்கள் அறிவார்களா?

ஒவ்வொரு மாகாணசபைக்கும் வருடாந்தம் உட்கட்டமைப்பு வசதிக்காக மத்திய அரசால் எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகின்றது; என்பது உங்களுக்கு தெரியுமா? அந்த சிறிய தொகையில் வீடமைப்பு அமைச்சுக்கு எத்தனை விகிதம் ஒதுக்கப்படுகின்றது; என்பதை அறிவார்களா?

மாகாணசபைகளுக்கு நிதி ஒதுக்கப்படுகின்ற பொறிமுறையை அறிவார்களா ?

கிழக்கு மாகாணத்தில் தேவையான வீடுகளின் எண்ணிக்கையை அறிவார்களா? இதற்குத் தேவையான நிதியினை மாகாணசபையினூடாக பெறுவார்களா? அவ்வாறாயின் எப்படி என விளக்குவார்களா? அல்லது மத்திய அரசினூடாக பெறுவார்களா? அவ்வாறாயின் எப்படி என விளக்குவார்களா?

அல்லது வெளிநாடுகளில் இருந்து கொண்டுவருவார்களா? அவ்வாறாயின் எப்படி என விளக்குவார்களா? அல்லது தனது கட்சிக்கு அடுத்த கட்சியைவிட ஒரு ஆசனமேனும் குறைவாக கிடைத்தால் தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் ; என்று சம்மாந்துறையில் வைத்து கூறியதுபோல் மேடைகளைக் கண்டால் விடுகின்ற வாய்ச்சவாடலா?

அவை ஒரு புறம் இருக்கட்டும். இவ்வளவு சக்திவாய்ந்த அமைச்சர்கள், வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களின் வீட்டுத்தேவைகளில் 1/4 பங்கைத்தானும் இன்னும் பூர்த்தி செய்ய முடியாமல் இருப்பது ஏன்? ஆகக்குறைந்தது முசலிமக்களுக்கெதிராக அநியாயமாக வெளியிடப்பட்ட அந்த வர்த்தமானியைக்கூட இன்னும் ரத்துச் செய்ய முடியாமல் இருப்பது ஏன்?

25 வருடங்கள் கஷ்டப்பட்ட சொந்த மக்களுக்கே வீடுகட்டிக்கொடுக்க, முழுமையாக மீள்குடியேற்ற ஆண்டுகள் 7 கடந்தும் முடியாதவர்கள், 5 ஆண்டுகள் கடந்தும் ஒரு பிழையான வர்த்தமானியை ரத்துச்செய்ய முடியாதவர்கள், தனக்கு வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பிய மக்களின் அடிப்படைத் தேவைகளைக்கூட நிறைவுசெய்ய முடியாதவர்கள், மாகாணசபைகளே முடம், எதுவும் செய்யமுடியாது என்று தமிழ்த்தலைவர்கள் மட்டுமல்ல, சிங்கள முதலமைச்சர்களே முனகும்போது, கிழக்கு முதலமைச்சர் பதவியைத் தரட்டாம், வீடில்லாப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பார்களாம்.

இவர்களின் அறிவிப்புக்களைப் பார்க்கும்போது ஓர் உள்ளூர் பழமொழிதான் ஞாபகம் வருகின்றது. " பெருவிசாதி (பெருவியாதி) கொண்டது பெலாப்பழம் ( பலாப்பழம்) கேட்டுச்சாம்."

கிழக்கு மக்களை மட்டுமல்ல இந்த நாட்டு முஸ்லீம்களை, சந்தர்ப்பவாதிகள் ஏமாற்றுவதற்கு இனியும் அனுமதிக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -