பொகவந்தலாவயில் ஐஸ் மழையுடன் சூராவளி - 25 வீடுகள் சேதம்

மு.இராமச்சந்திரன்-
பொகவந்தலா டின்சின் தோட்டத்தில் ஏற்பட்ட மினி சூராவளியினால் 25 வீடுகள் சேதமாகியுள்ளதாக பொகவந்தலா பொலிஸார் தெரிவித்தனர். தொடர்ந்தும் பெய்து வரும் மழைக் கால நிலையில் 09.03.2017. மாலை 4 மணியளவில் ஐஸ் மழையுடன் ஏற்பட்ட மினி சூராவளியிலே மேற்படி வீடுகளின் கூறைகள் சேதமாகியுள்ளது.

பாதிப்புக்குள்ளான குடியிருப்பாளர்களுக்கு மாற்றீடு செய்ய பொலிஸாரும் தோட்ட நிருவாகமும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் யாருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர். கடந்த சில நாட்களாக மலையகத்தில் மழை பெய்துவருகின்றதுடன் லிந்துலை மெரேயா பகுதிகளிலும் மினி சூராவளியினால் குடியிருகள் சேதமாகியமை குறிப்பிடத்தக்கது.


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -