இன்னுமொரு பூவை இழக்காதிருக்க....

இன்னுமொரு பூவை இழக்காதிருக்க....
+++++++++++++++
ஒரு 
பூ
பூமியை விட்டு
புறப்பட்டுப் போனது.

பொல்லாத நோய்
பூவை வாட்ட
அல்லாஹ்வின் நாட்டம்
ஆகிறாவை நோக்கி
சொல்லாமல் புறப்பட்டது
சுவனத்துக் கிளி.

யாரென்று அறியாதோரும்
இதயம் வாட
ஊரே சோகத்தால்
உள்ளுக்குள் நோக
இடையில் மூச்சை நிறுத்தி
இன்னுமொரு உலகம் நோக்கி
விடை பெற்றுச் சென்றது
விளையாட்டுப் பிள்ளை.

இன்னுமொரு மலரை
இந்த மண்
இழக்காதிருக்க
என்ன செய்யப் போகிறோம்
எல்லோர்க்கும் முன்னும்
இருகின்ற கேள்வி

கண்ட இடத்தில்
கண்டிப்பாய் எதிர்ப்போம்
தண்ணீரைத் தேக்கி
கண்ணீரைத் தருபவரை.

சும்மா காய்ச்சல் என்று
சொல்லுவதை விட்டு விட்டு
உம்மாமாரே செல்லுங்கள்
உடனடியாய் ரத்தம் சோதிக்க

அடுத்த நுளம்பு
ஆர் வீட்டுக் கதவை
திறக்கப் போகிறதோ
இறக்கை விரித்து
இறக்கச் செய்யப் போகிறதோ

சுத்தம் செய்வோம்
அரசாங்கத்துக்காக அல்ல
ஆரும் சாகாமல் இருப்பதற்காக.

கையேந்துவோம்
கவலைப் படுவோம்
இன்னுமொரு மலரை
இந்த மண்
இழக்காமல் இருக்க.
..முகம்மட் நிலூஷ்..
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -