ஏ.எம்.கீத் திருகோணமலை-
கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தில் இன்று பரீட்சை நடைபெறுவதாக இருந்தது. ஏற்கனவே பல்கலைகளகத்தினுல் ஒலுக்காற்று நடவடிக்கை காரணமாக இடைநிறுத்தப்பட்ட 16 மாணவர்களை பரீட்சைக்கு தோற்ற நிர்வாகம் தடை விதித்திருந்தது. ஆனாலும் அவர்களையும் பரீட்சைக்கு உள்வாங்கக்கோரி மாணவர்களின் அநேகர் பரிட்சையை பகிஷ்கரித்து இருந்தனர். ஆனாலும் புதிய 13 மாணவர்கள் அரியஸ் உள்ள 4மாணவர்கள் உட்பட 17 மாணவர்களும் பரீட்சை எலுதிக்கொண்டிருக்கும் போது அங்கு வந்த மற்ற மாணவர்களால் வகுப்பறை அடித்து நொருக்கப்பட்டது. டயர்களும் கொலுத்தப்பட்டன. திருமலை வளாக நிர்வாகத்தால் அழைக்கப்பட்ட திருகோணமலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உட்பட்ட பொழிஸாரினால் சுமுகமானநிலமை ஏற்படுத்தப்பட்டது.