மு.இராமச்சந்திரன்-
கடந்த சில தினங்களாக அட்டன் நகரசையினரால் கழிவுகளை அகற்றாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே 20.03.2017 காலை ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் கழிவுகள் வீதியோரங்களிலும் குடியிருப்பு பகுதிகளிலும் கிடப்பதஜால் துர்நாற்றம் வீசுவதனால் சுவாசிக்க முடியாதுள்ளதாகவும் சூழல்மாசடைவதாகவும் தெரிவித்தனர் அட்டன் டிக்கோயா நகரசையினர் உடனடியாக கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் தெரிவித்தனர்.
இது தொடர்பில் அட்டன் டிக்கோயா நகரசையின் செயலாளர் எஸ். பிரியதர்சினியிடம் கேட்ட போது தேர்தல்காலம் வருவதனால் பொது மக்களை தூன்டி விட்டு ஆர்பாட்டங்களை சில அரசியல்வாதிகள் முன்னெடுபதாகவும் அட்டன் டிக்கோயா நகரசைக்குற்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் கழ்வுகளை கொட்டுவதற்கு இடமொன்று தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் விரைவில் கழிவுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.