இளையராஜா உனக்கு சோற்றுக்கு வழியில்லையா..?

தற்போது சினிமா உலகில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ள ஒரு விடயமாக இளையராஜா மற்றும் பாலசுப்பிரமணிய இசை விவாதம் மாறிப்போயுள்ளது.பிரபல இசையமைப்பாளரான இளையராஜா சார்பில், பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியனுக்கு அனுப்பப்பட்டுள்ள குறித்த நோட்டீஸ் தான் தற்போது திரை உலகத்தினர் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதை பாலசுப்ரமணியம் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்பு, இளையராஜாவின் சார்பில் அவரது வழக்கறிஞர், எனக்கும், சரணுக்கும், பாடகி சித்ராவிற்கும், உலகளவில் கச்சேரியை நடத்தும் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்த நோட்டீஸில் ‘இளையராஜா கம்போஸ் செய்த பாடல்களை அவரின் அனுமதி இல்லாமல் மேடையில் பாடவோ, இசைக்கச்சேரி நடத்தவோ கூடாது. அதையும் மீறி செய்தால் காப்புரிமை சட்டத்திற்கு எதிராகிவிடும். எனவே மிகப்பெரிய அபராதத்தொகையை சட்டப்படி தரவேண்டியிருக்கும்’ என்று குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில் இதற்கு பதிலடியாக அவருடைய சகோதரர் கங்கை அமரன் மிக காட்டமாக தனியார் தொலைகாட்சி ஒன்றிக்க பேட்டியளித்துள்ளமை மேலும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, இளையராஜாவிற்கு பணப்பற்றாக்குறையா? சாப்பிடுவதற்கு வழி இல்லையா? இவ்வாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளமை தவறு எனவும் அப்படியென்றால் இளையராஜா இசையமைத்த பாடல்களை பெட்டியில் பூட்டி வைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

அவர் ஏற்கனவே இசையமைத்த பாடல்களுக்கு தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களிடம் சம்பளம் வாங்கிவிட்டார் எனவும் மக்களிடம் போய் சேர்ந்துவிட்ட பாடல்களை இவரால் எப்படி பாட வேண்டாம் என கூறமுடியும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -