திருகோணமலை நீதிமன்றத்தில் பாரிய சிரமதானம்..!

அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை சுகாதார வைத்திய பணிமனையினால் அனைத்து அரச திணைக்களங்களையும் சுத்தமாக வைத்திருக்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளையடுத்து இன்று (21) திருகோணமலை நீதிமன்ற கட்டிடத்தொகுதிகளை சுத்தப்படுத்தும் பாரிய சிரமதானம் மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.பிரேமசங்கர் தலைமையில் நடைபெற்றது.

"சுத்தத்தை பேணுவோம். சட்டத்தை நிலை நாட்டுவோம் "

எனும் தொனிப்பொருளில் திருகோணமலை நீதிமன்றத்தில் கடமையாற்றுகின்ற ஊழியர்கள் அனைவரும் ஒன்றினைந்து நீதிமன்ற கட்டிடத்தொகுதிகளை சுற்றியுள்ள பகுதிகளை சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இச்சிரமதானப்பணியில் நீதிபதி உட்பட நீதவான்கள் மற்றும் பதிவாளர்கள். நீதிமன்ற ஊழியர்கள்.சட்டத்தரணிகள் என பலரும் கலந்து கொண்டனர். ஆனாலும் இன்றைய தினம் காலை நேரத்தில் நீதிமன்ற நடவடிக்கைகள் இடம் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -