பதுளை மாநகரின் உணவகம் ஒன்றில் உணவு உண்ணச் சென்ற இளைஞன் ஒருவர் திடீரென மயங்கி கொதிக்கும் எண்ணெய் தாச்சியில் விழுந்ததினால் அவர் பலத்த சூட்டுக் காயங்களுடன் பதுளை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது.
பதுளை பகுதியின் தெல்பெத்த பெருந்தோட்டத்தைச் சேர்ந்த 18 வயது நிரம்பிய ரவி என்பவரே இவ்வாறு பாதிக்கப்பட்டவர் ஆவார். மேற்படி உணவகத்தில் வடை தயாரிக்க வைக்கப்பட்டிருந்த கொதிக்கும் எண்ணெய் தாச்சியில் வீழ்ந்த குறித்த நபரின் நிலை தற்போது கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பாக பதுளை பொலிஸாசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.