சோகம் - கொதிக்கும் எண்ணெய் தாச்சியில் மயங்கி விழுந்த இளைஞன்

துளை மாநகரின் உணவகம் ஒன்றில் உணவு உண்ணச் சென்ற இளைஞன் ஒருவர் திடீரென மயங்கி கொதிக்கும் எண்ணெய் தாச்சியில் விழுந்ததினால் அவர் பலத்த சூட்டுக் காயங்களுடன் பதுளை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது.

பதுளை பகுதியின் தெல்பெத்த பெருந்தோட்டத்தைச் சேர்ந்த 18 வயது நிரம்பிய ரவி என்பவரே இவ்வாறு பாதிக்கப்பட்டவர் ஆவார். மேற்படி உணவகத்தில் வடை தயாரிக்க வைக்கப்பட்டிருந்த கொதிக்கும் எண்ணெய் தாச்சியில் வீழ்ந்த குறித்த நபரின் நிலை தற்போது கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பாக பதுளை பொலிஸாசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -