ஏ.எஸ்.எம்.தாணீஸ்-
திருகோணமலை தோப்பூர் அல்லைநகர் பிரதேசத்தைச் சேர்ந்த நூறு முஹமது நுபைர் வயது 27 டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று திங்கட்கிழமை 20 உயிர் இழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேலை உயிர் இழந்த நபரின் சகோதரரும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. உயிர் இழந்த நபரின் ஜனாஸா திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மூதூர் பொதுச் சுகாதார பரிசோதகர்.