எஸ். ஹமீத்-
''தீவிரவாதிகள் பயன்படுத்திய துப்பாக்கிகள் தற்போது பாதாள உழைக்க கோஷ்டிகளிடம் உள்ளன. மேலும், சிறைச்சாலை பேருந்து மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு விடுதலைப் புலிகள் பயன்படுத்திய துப்பாக்கிகளே பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது!''
இவ்வாறு பெருநகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க, மகரகம பிரதேசத்தில் இன்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும் போது கூறியுள்ளார்.
''ஆயினும், பாதாள உலக குழுக்களை அடக்குவதற்கு எடுக்க வேண்டிய எல்லா நடவடிக்கைகளையம் எமது அரசாங்கம் வெகு துரிதமாக எடுக்கும்'' எனவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.