கல்முனையில் அமைச்சர் ஹக்கீம் : முக்கிய கலந்துரையாடல்

சப்னி அஹமட்-
ல்முனை - சம்மாந்துறை ஒருங்கிணைந்த பாரிய நகர அபிவிருத்தி திட்டம் தொடர்பான திட்டமிடல் பணிகளின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல் இன்று சனிக்கிழமை (04) கல்முனை மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திட்டமிடல் முன்னேற்றங்கள் குறித்து விளக்கமளித்தனர்.

இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான அப்துல் றஸாக் (ஜவாத்), ஏ.எல். தவம், ஆரிப் சம்சுதீன், ஐ.எல்.எம். மாஹிர், முஸ்லிம் காங்கிரஸ் சிரேஷ்ட துணைத் தலைவர் அப்துல் மஜீட், முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் மன்சூர் ஏ. காதிர் உள்ளிட்டவர்களுடன் அமைச்சின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -