ஹஸ்பர் ஏ ஹலீம்-
கிண்ணியா தளவைத்தியசாலையை சகல வசதிகளுடனும் கொண்டதாக தரமுயர்வு தொடர்பான கவனயீர்ப்பு போராட்டம் இன்று (28) காலை கிண்ணியா மட்டக்களப்பு பிரதான வீதியின் பழைய வைத்தியசாலைக்கு முன்பாக நடை பெற்றது இதில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய சுலோகங்களை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர் இதன்போது திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கிண்ணியாவைச் சேர்ந்த மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லா மஹ்ரூப்,எம்.எஸ்.தௌபீக், இம்ரான் மஹ்ரூப் போன்றோர்கள் இதில் பங்கேற்றனர்.
எனவே இவ்வாறு அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களாயினும் கிண்ணியா தளவைத்தியசாலையை அபிவிருத்தியில் ஒரே நோக்கம் கொண்டவர்களாக இருப்பதனையிட்டு மக்கள் அங்கலாய்க்கின்றனர் இந்தப் போராட்டத்தின் வெற்றி நிச்சயமாக மூன்று உறுப்பினர்களையும் கொண்டுநிறறைவேறுமா என கிண்ணியா மக்கள் மேலும் இவர்களை கேட்டு நிற்கின்றனர்கள்.
மத்திய அரசின் கீழ் கொண்டுவர கிண்ணியா தளவைத்தியசாலையை தரமுயர்த்த துரித நடவடிக்கைகளை மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு.