திருகோணமலையில் பதற்ற நிலை - வீதியை வழிமறித்து ஆர்பாட்டம்

ஏ.எம்.கீத் திருகோணமலை-
திருகோணமலை அபயபுர ஆரம்பபிரிவு பாடசலையில் காணப்படும் ஆசிரியர்களின் பற்றாக்குறையை நிவர்த்திசெய்து தருமாறு கோரி இன்று காலை 7.30 மணிமுதல் திருகோணமலை- கண்டி வீதியை வழிமறித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.

இதனால் திருகோணமலையில் இருந்து புறப்படும் வாகனங்கள் அனைத்தும் அபயபுர சந்திக்கு வந்து 3ம் கட்டை உப்புவெளியூடாகவும் திருகோணமலை நகருக்கு வரும் வாகனங்கள் அணைத்தும் பாழையூற்று மற்றும் மட்கோ ஊடாகவும் பொலிஸாரினால் திசை திருப்பிவிடப்பட்டன. ஆர்பாட்டக்காரர்களோ தமது கோரிக்கை நிவர்த்தி செய்து தரும் வரை தொடர் ஆர்பாட்டங்கிளில் ஈடுபடுவோம் என உறுதிபட கருத்து தெரிவித்தனர். 

இதே பெற்றோர்கள் போன வாரம் அபயபுர பாடசலைக்கு தமது பிள்ளைகளை அனுப்பாமல் பாடசாலைக்கு வந்து பாடசாலையை மூடியது குறிப்பிடத்தக்கது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -