கிண்ணியா வைத்தியசாலை தரம் உயர்த்தல்?; நாளை ஒன்றுகூடல்

ஹஸ்பர் ஏ ஹலீம்-

கிண்ணியாவில் அண்மைக்காலமாக பேசு பொருளாகக் காணப்படும் வைத்தியசாலை தரமுயற்றுதல் தொடர்பாகக் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ் தொடர்பன ஒன்றுகூடல், தி/கிண்ணியா அல்-ஹிறா மகா வித்தியாலயத்தில் நாளை (26) மாலை 4 மணிக்கு நடை பெறவுள்ளது.

டெங்குக் காய்ச்சல் காரணமாக கிண்ணியாவில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இவ் வைத்தியசாலையில் இடப்பற்றாக்குறை மற்றும் வளப்பற்றாக்குறை காணப்படுகிறது.

இது சம்மந்தமான இறுதிக்கட்ட நடவடிக்கை எடுப்பதற்காக வேண்டி உலமாக்கள், இளைஞர்கள், சிவில் அமைப்புக்கள், பொது நலன்விரும்பிகள், ஆசிரியர்கள், விளையாட்டு கழகங்க உறுப்பிர்கள் மற்றும் அரசியல் வாதிகள் அனைவரும் ஒன்று கூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கிண்ணியா அபிவிருத்தி காணவேண்டும் என்ற ஆசையில் ஏமாற்றத்துடன் காத்திருக்கும் கிண்ணியா மண் மீது பற்றுள்ள ஒவ்வொருவரும் இவ்வொன்றுகூடலில் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -