கலப்பு நீதிமன்றத்திற்கு அனுமதி இல்லை - டிலான் பெரேரா

‘ஜெனீவா கூட்டத்தொடரில் இலங்கை எவ்வாறான வாக்குறுதிகளை கொடுத்தாலும் இலங்கைக்குள் கலப்பு நீதிமன்றம் ஒன்றை அமைக்க ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்’ என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடகப்பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார்.

ஜெனீவா கூட்டத்தொடர் முடிவடைந்துள்ள நிலையில் இலங்கை தொடர்பிலான அறிக்கை தொடர்பிலும், கலப்பு அரசாங்கம் தற்போது நாட்டில் முன்னெடுக்கவுள்ள நகர்வுகள் தொடர்பிலும் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சர்வதேச கட்டளைகளுக்கு அடிபணிய நாடும் ஒருபோதும் தயார் இல்லை எனக் குறிப்பிட்டுள்ள டிலான் பெரேரா, ஐக்கிய தேசியக் கட்சியின் நகர்வுகள் மிகவும் மோசமான வகையில் அமைந்துள்ளதென குற்றஞ்சாட்டியுள்ளார். இவ்வாறு சென்றால் வெகு விரைவில் தேசிய அரசாங்கத்தை கலைக்க வேண்டிய தேவை ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -