அடைமழை அடித்தாலும் விடாது தொடரும் போராட்டம் - காரைதீவில் பட்டதாரிகள்

காரைதீவு நிருபர் சகா-
ம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் சத்தியாக்கிரகப்போராட்டம் நேற்று வியாழக்கிழமை 18வது நாளாக காரைதீவு விபுலானந்த சதுக்கமருகே புதிய பரிணாமத்துடன் ஜருராக நடைபெற்றுவருகின்றது.

நேற்றிரவு பெய்த அடைமழையினால் பட்டதாரிகள் தங்கியிருந்த கூடாரம் ஓழுகி மழைநீர் கூடாரத்தினுள் நுழைந்து இடமெல்லாம் நனைத்தது.அதனால் அவர்கள் மிகுந்த அசௌகரியப்பட்டார்கள். பெண்பட்டதாரிகள் சிரமப்பட்டார்கள். இருப்பினும் அவர்கள் அதனை வழித்துவிட்டு போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

மேலும் கூடாரத்தினுள் முன்னே தராசும் அத்தாங்கும் தொங்கவிடப்பட்டிருந்தது. அது தொடர்பில் அங்கிருந்த வேலையற்றபட்டதாரி சங்கப்பொருளாளர் கே.சுரேசிடம் கேட்டபோதுஇவ்வாறு பதிலளித்தார். நாம் பட்டம் முடித்தும் எமது தாய்தந்தையர் செய்துவந்த தொழிலையே இன்னமும் செய்யவேண்டியிருக்கிறது. உதாரணமாக மீன்பிடித் தொழிலை இங்கு சுட்டிக்காட்டியிருக்கின்றோம். படித்தும் அத்தாங்குடன் அலையவெண்டுமாகவிருந்தால் எதிர்கால சந்ததி படிக்குமா? அல்லது படிக்கத்தான் ஆசை வருமா? பட்டங்கள் விற்பனைப்பண்டங்களா?

மற்றது பட்டங்களை தராசில் விற்க வேண்டிய துர்ப்பாக்கியநிலையிலுள்ளோம். என்ன விலைக்கு என்ன பட்டம் என்று கேட்குமளவிற்கு பட்டங்கள் விற்பனைப்பண்டங்களாகிவிட்டன. வெளிவாரியாக பணத்திற்கு பட்டங்கள் விற்கப்படுகின்றன. இந்த வெளிவாரிப்படிப்பால்தான் எமது பட்டங்களுக்கு மௌசு குறைந்தது. அதனால்தான் இன்று வேலைவாயப்பில்லாமல் கஸ்ட்டப்பட்டு அலைகின்றோம். வெளிவாரி முறைமையினால் கல்விக்கடைகள் பணம் சம்பாதிக்கின்றன. அவர்கள் உழைப்பதற்காக கல்வியை விற்கின்றார்கள். அதனால் பட்டங்கள் மலினப்படுத்தப்படுகின்றன. இது மட்டுப்படுத்தப்படவேண்டும். இன்றேல் பல்கலையில் பட்டம்பெறும் மாணவர்கள் இப்படி வருடக்கணக்கில் தொழிலுக்கு காத்திருக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.

முதலில் எமக்குவழியைக்காட்டுங்கள் !

நேற்று கிழக்குவிவசாய அமைச்சர் ஒரு கருத்தைச்சொன்னார். கணிதம் விவசாயம் விஞ்ஞானம் படிக்கவேண்டுமாம். நாம் ஏலவே கலையை நுண்கலையைப் படித்துமுடித்துவிட்டோம். எங்களுக்கு முதலில் வழியைக்காட்டுங்கள். வரும்சந்ததியிடம் உங்கள் வேதத்தை ஓதுங்கள். தமிழர்கலையை வளர்க்கவேண்டும். அழிந்துபோகும் கலைகளை உயிர்ப்பிக்கவேண்டும் என்றெல்லாம் வாய்கிழியக்கத்துகிறார்கள். ஆனால் அத்தகைய பாடப்பரப்பில் பட்டங்களை முடித்த நாம் நாயாய் 18நாட்களாக அலைகின்றோம்.கவனிப்பாரில்லை.

சமகால நிலைமை!

இத்தகைய அரசியல்வாதிகள் வந்துகூடப்பார்த்ததில்லை. இன்னும் எமது போராட்டத்திற்கு முடிவுகிட்டவில்லை.எவ்விதமுன்னேற்றமுமில்லை. கிழக்கு முதலமைச்சர் நல்லதொரு முடிவை எடுத்து மத்தியஅரசுவரை பேசினார். ஆனால் இன்று அவர் இந்தியா சென்றுவிட்டார். இன்னும் இருவாரங்களுள் தீர்வு என்று கூறுகின்றார்கள். எது எப்படியிருப்பினும் எமக்கென்று தனியா தீர்வு நம்பகமாக கையயில் கிடைக்கும்வரை எமது பேராட்டம் மழை அல்ல இடி அல்ல புயல் வந்தாலும் தொடரும். என்றார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -