ஏ.எச்.ஏ.ஹுஸைன்-
நீண்டகாலமாக புனமைக்கப்படாதிருந்த மட்டக்களப்பு வாழைச்சேனை, சுங்கான்கேணி - கிண்ணியடி இணைப்பு வீதி புனமைக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை 19.03.2017 அன்று மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது. மடடக்களப்பு கோறளைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட இந்த வீதி 84 இலட்ச ரூபா செலவில் கொங்கிறீட் வீதியாக புனரமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கே. துரைராஜாசிங்கம், வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் எஸ். எம். ஷிஹாப்தீன் உட்பட அதிகாரிகளும் பிரதேச பொதுமக்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.