எலி அறுக்கும் தூக்காது போல உள்ளது காத்தான்குடி ஐ.எஸ் , ஐ.எஸ். அமைப்பு விடயம் சற்று சிந்தியுங்கள்

ஸபா ரௌஸ் கரீம் கல்முனை-

லங்கையைச் சேர்ந்த 32 பேர் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் இணைந்துள்ளதாக அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ கடந்த வருடம் தெரிவித்தார் அந்த நேரத்தில் முஸ்லிம்பாராளமன்ற உறுப்பினர்கள் பலர் போர்க்கொடி தூக்கினர் அப்பட்டமான பொய் சுமத்துகின்றார் நல்லாட்சியிலும் இனவாதம் தலைவிரித்து ஆடுகின்றது நீதியமைச்சர் பொறுப்போடு நடந்துகொள்ளவேண்டும் என பாராளமன்றத்தில் குரல் எழுப்பினர் அந்த விடயத்தை எம் சமூகம் மக்கள் பிரதிநிதிகளை பாராட்டினார்கள்

கடந்த ஆட்சியிலும் ,நல்லாட்சிலும் சிங்கள இனவாத அமைப்புக்களான ராவய ,பொதுபலசேனா முஸ்லிம்களை அழிக்க பல காட்டிக்கொடுப்புக்களை செய்தது ஆனால் எம் முஸ்லிம் மக்கள் எதிர்த்தனர் நாம் உண்மையான முஸ்லிம்கள் ஒரு போதும் இனவாத அமைப்புகளோடும் இணையமாட்டோம் என பதிலடி கொடுத்தனர்

இன்று நடப்பவை என்ன எம் முஸ்லிம்களை காட்டி கொடுப்பதும் , முஸ்லிம்கள் மீது அப்பட்டமான பொய்களை கூறுவதும் யார் எம் இஸ்லாமிய மார்க்கத்தை நன்றாக கற்ற ஒரு சில உலமாக்களும் , சில சகோதரர்களும் தான் என்பதை யாரும் மறுக்க முடியாது

காத்தான்குடியில் நடந்த ஒரு சிறிய கொள்கை பிரச்சினையினை முழுநாட்டிற்கும் பரப்பி காத்தான்குடியில் ஐ.எஸ் , ஐ.எஸ். தீவிரவாதிகள் உள்ளனர் அரசு அவர்களை கைது செய்யவேண்டும் என எம் முஸ்லிம்களே போர்க்கொடி தூக்குவதை பத்திரிகையிலும்,முகநூலிலும் ,சிங்கள இணையதளத்திலும் ,பார்க்கையில் வேதனையாகவுள்ளது இதற்கெல்லாம் பிரதான காரணம்.
சிறு கொள்கை பிரச்சினைதான் ஆனால் இது தீவிரவாதப் போக்குடைய சில அமைப்புகளுக்கு தீனி போடுகின்ற விடயம் என்பதை மறந்து எம் சகோதர்கள் செயற்படுவது கவலை தரும் விடயமாகும்

முஸ்லிம்களாகிய நாங்களே எங்களை காட்டி கொடுத்துவிட்டு நாளை இனவாத அமைப்புக்கள் எமக்கெதிராக பேசினால் எம் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு எதிராக வசைபாடுவது எந்த வகையில் நியாயம் அவர்கள் எவ்வாறு பாராளமன்றத்தில் விவாதிப்பது இனவாதம் பிடித்த ஒரு சில பாராளமன்ற உறுப்பினர்கள் எம் முஸ்லிம் பாராளமன்ற உறுப்பினர்களை நோக்கி ஐ.எஸ் , ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் இலங்கை முஸ்லிம்களும் உள்ளனர் முஸ்லிம் அமைப்புக்களே சொல்கின்றனர்

நாங்கள் சொன்னால் மறுப்பது நியாயம் இன்று உமது அமைப்புக்களே கூறுகின்றனர் இதையாவது ஏற்றுக்கொள்ளுங்கள் என கூறினால் எம் மக்கள் பிரதிநிதிகள் பதில் கொடுக்காமல் தடுமாறுவார்கள் காரணம் முஸ்லிம்களிலும் பல பிரிவுகள் உள்ளன என கூற வெட்கப்படுவார்கள்
என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்

எலி அறுக்கும் தூக்காது என்பார்கள் அது போன்றுதான் காத்தான்குடி வாள்வெட்டு விடயமுள்ளது சற்று சிந்தியுங்கள் நீங்கள் கூறும் சின்ன வார்த்தைகள் நாளை நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம்களின் இருப்புகளுக்கு பர்மா போன்று ஆப்பாக மாறிவிடும் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -