வீதிகள் மற்றும் வடிகான் என்பன மக்கள் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வு..!

எம்.ரீ.ஹைதர் அலி-
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தவிசாளர் கே.பீ.எஸ். ஹமீட் அவர்களின் வேண்டுகோளுக்கமைவாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கின் முயற்சியினால் கிழக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ. நஸீர் அஹமட் அவர்களின் பூரண ஒத்துழைப்போடு 2016ஆம் ஆண்டுக்கான மாகாண சபை நிதி ஒதுக்கீட்டிலிருந்து வீதி மற்றும் வடிகான்களை மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வுகள் கோறளைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் எஸ்.எம். சஹாப்தீன் தலைமையில் 2017.03.18ஆந்திகதி-சனிக்கிழமை நடைபெற்றது. 

கிழக்கு மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டிலிருந்து மாவடிச்சேனை ஹபீப் கங்காணியார் வீதிக்கான வடிகான், மாவடிச்சேனை அல்-ஹிறாஸ் வீதி, பிறைந்துறைச்சேனை தாவூத் மோதினார் வீதி மற்றும் வாழைச்சேனை மீன்பிடி வீதி என்பன மக்கள் பாவனைக்காக உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களாகும். 

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ. நஸீர் அஹமட் அவர்களும். கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் ஏனைய அதிதிகளாக கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தவிசாளர் கே.பீ.எஸ். ஹமீட் மற்றும் கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -