நாந்தான் கடவுள் எனக்கே பூஜ செய்யுங்கள் -ரகளை செய்த ஆசாமி

திருப்பதி ஏழுமலையான் கோயில் எதிரே விளக்குகளை கீழே தள்ளிய ஆசாமி ஒருவர், ‘‘இங்கு நான் தான் கடவுள், எனக்கே பூஜை செய்யுங்கள்’’ என்று கூறி ரகளையில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பதி ஏழுமலையான் கோயில் எதிரே அகிலாண்டம் உள்ளது. இங்கு 7 அடுக்குகள் கொண்ட பெரிய விளக்கு வைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் இந்த விளக்கின் அருகே தீபம், கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து வழிபடுவது வழக்கம். அதேபோல், நேற்றுமுன்தினம் இரவு 8.30 மணியளவில் ஏராளமான பக்தர்கள் கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து வழிபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு வந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆசாமி ஒருவர், திடீரென அந்த விளக்கை கீழே தள்ளிவிட்டு, ‘‘இங்கு நானே கடவுள், எனக்கு பூஜை செய்யுங்கள்’’ எனக்கூறி ரகளையில் ஈடுபட்டார். தொடர்ந்து அங்கு பூஜை செய்து கொண்டிருந்த பக்தர்களையும், தடுக்க வந்த பக்தர்களையும் தாக்கியதால் அனைவரும் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து, தகவல் அறிந்து வந்த தேவஸ்தான பாதுகாப்பு ஊழியர்கள் அந்த ஆசாமியை பிடித்து விசாரித்தனர். அதில், அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை திருமலையில் உள்ள தேவஸ்தான அஸ்வினி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இதுகுறித்து, திருமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -