களுத்துறை துப்பாக்கி சூடு : சந்தேகநபர்கள் நாட்டை விட்டுச் செல்ல முயற்சி

ளுத்துறையில் சிறைச்சாலை பேருந்து மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட, சந்தேகநபர்கள் நாட்டை விட்டு தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புலனாய்வாளர்கள் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சந்தேகநபர்களை கைது செய்வதற்கு, கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்களில் இரண்டு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போலிக் கடவுச் சீட்டுடனேயே சந்தேகநபர்கள் சுற்றித் திரிகின்றனர் எனவும், அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை, கடந்த மாதம் 27ஆம் திகதி, களுத்துறையில் வைத்து சிறைச்சாலை பேருந்து மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் காரணமாக இரண்டு அதிகாரிகள் உள்ளிட்ட 7பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -